Skip to main content

பழசுக்கு புதுசு.! வித்தியாசமான முறையில் கரோனா நிவாரணம்..! 

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

கொரோனா பரவுவதை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், உணவு கிடைக்காமலும் தவிக்கும் மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் உதவி வருகிறார்கள். அது போல் சென்னையில் ஒரு தனியார் அமைப்பு வித்தியாசமாக உதவி வருகின்றனர்.  தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள்(NGO), குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம் ஆகிய அமைப்புகளில் சமைக்க பயன்படுத்தபடும் அத்தியாவசியமான பொருட்களான மிக்சி, கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்தால் சரி செய்ய முடியாமல் அவதிபடுபவர்களின்  பழுதடைந்த  பொருட்களை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக புதிய பொருட்களை கொடுத்து வித்தியாசமான முறையில் உதவி செய்து வருகிறது சென்னையை சேர்ந்த இன்சோ(INSO) என்கிற தனியார் தொண்டு நிறுவனம். 

 

humanity

 

இந்நிறுவனம் சார்பில் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு இன்று காலை சுமார் 250  இலவசமாக மிக்சி, கிரைண்டர், குக்கர் போன்ற பொருட்களை வழங்கப்பட்டன. இது குறித்து பேசிய இந்நிறுவனத்தின் உரிமையாளர்  வழக்கறிஞர் பிரகாஷ்,  "எங்கள் இன்சோ உதவும் கரங்கள் அறக்கட்டளை  கடந்த 15 வருடமாக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் பெரும்பாலும் வெளியிடங்களுக்கு சென்று சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் எங்கும் செல்லமுடியாத சூழ்நிலையில் ஆயிரம்விளக்கு  தேனாம்பேட்டை பகுதியில் உள்ள பாபு தெரு, முத்தையா முதலி தெரு, எல்லையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 118 வது வார்டு முழுவதும் தண்ணீர் நிரப்பிய லாரியில் கிருமி நாசினி கலக்கப்பட்டு, அனைத்து தெருக்களிலும் எங்கள் அறக்கட்டளை சார்பில் தெளிக்கப்பட்டது.

 

humanity

 

இதனால் ஓரளவு கிருமி நாசினிகளை ஒழிக்க முடியும் என்பதனை செய்து வருகிறோம். மேலும் எங்கள் அறக்கட்டளை மூலம் நேரடியாக உணவுப் பொருட்கள் வழங்க முடியாத காலக்கட்டத்தில் இருப்பதால் சென்னை மாநகராட்சியின் மூலம் சமைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர்களிடம் கொடுத்து  சமூக சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம்.

 

humanity

 

தற்போதுள்ள சூழலில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்சோ( InSO) உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் போன்ற தொண்டு நிறுவனங்களில் சமையல் செய்ய பயன்படும் இட்லி குக்கர் மற்றும் மிக்ஸி, கிரைண்டர் பழுதானால்.. இலவசமாக  புதிய பொருட்களாக மாற்றி தர தயாராக உள்ளோம்...  சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் எங்களுக்கு கிளைகள் உள்ளதால் யாருக்கு தேவைப்பட்டாலும் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்.

தேவை இருப்போர் 9381280808 என்ற எண்ணிற்கு அழைத்தால் மாற்று பொருட்கள் வழங்கப்படும்"  என்கின்றார். இந்த பணியில் அறக்கட்டளை சமூக சேவகர்களும் கலந்துகொண்டனர்

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.