Skip to main content

தலைநகர் சென்னையில் லட்சத்தை கடந்த கரோனா!!! 4 ஆயிரத்தைக் கடந்தது உயிரிழப்பு!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020

 

today corona rate in tamilnadu

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக 6 ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5,822 பேர் தமிழகத்தையும் மற்றவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இன்று ஒரே நாளில் 58,243 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கரோனாவுக்கு 56,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் சென்னையில் மேலும் 1,074 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு என்பது ஒரு லட்சத்தைக் கடந்து, ஒரு லட்சத்தத்து 877 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது 1,90,966 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி இதுவரை இல்லாத அளவிற்கு 99 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 77 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனாவால் 2,140 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டில் 253 பேரும், காஞ்சிபுரம் 112, திருவள்ளூரில் 246, மதுரை 247, விருதுநகர் 64, ராமநாதபுரம் 63, திருவண்ணாமலை 62, திருச்சி 60 என உயிரிழப்பு எண்ணிக்கை உள்ளது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் இதுவரை 1,894 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இன்று 5 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதியானது. இன்று மட்டும் 4,805 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் மூன்றாவது நாளாக 5 ஆயிரத்திற்கு குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தேனியில் 377 பேருக்கும், விருதுநகரில் 286 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடியில் 243, திருவண்ணாமலையில் 242, கன்னியாகுமரியில் 198, தென்காசியில் 178, தஞ்சையில் 167, காஞ்சிபுரத்தில் 368, திருவள்ளூரில் 305, செங்கல்பட்டில் 314, கோவையில் 236, திருச்சியில் 138 மற்றும் புதுக்கோட்டையில் 91 பேர் எனக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.