Skip to main content

ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரித்த பாதிப்பு... தமிழகத்தில் 2 ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!!

Published on 12/07/2020 | Edited on 13/07/2020

 

CORONA RATE IN TAMILNADU

 

தமிழகத்தில் இன்று 41 ஆயிரத்து 325 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  46,960 பேர் தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் சென்னையில் இரண்டாம் நாளாக 1,200 க்கும் குறைவாக  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,168 பேருக்கு சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 77 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது 77,338 பேருக்கு இதுவரை சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை மொத்தமாக 89,532 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

சிகிச்சை பெறுபவர்களைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 68 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 43 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 25 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 2  ஆயிரத்தை  நெருங்கியுள்ளது, 1,966 பேர் இதுவரை கரோனாவிற்கு மொத்தமாக தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

43-ஆவது  நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை இன்று தொடர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் இன்று 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது 1,253 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு சென்னை தவிர்த்து பிற மாவட்டங்கள் 713 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 158  பேரும்,   திருவள்ளூரில் 127 பேரும் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 49, மதுரையில் 116, ராமநாதபுரத்தில் 34, திருவண்ணாமலையில் 22 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர்த்த பிற மாவட்டங்கள் கொரோனாவால் இதுவரை 713 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேல் கரோனா பாதிப்பு கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் 3,076 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 385 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 245, திருவள்ளூரில் 232, மதுரையில்  319, கன்னியாகுமரியில் 104, திருச்சியில் 103, சேலத்தில் 98 ,சிவகங்கை. ராமநாதபுரத்தில் தலா  75 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விருதுநகரில் 246பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.