Skip to main content

பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!!! 1700-ஐ  தொட்ட உயிரிழப்பு!!!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

corona rate in tamilnadu

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,261 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,25,350 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளது. அதேபோல் சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 72,500 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 74,167 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு சிகிச்சை பெறுவதைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 64 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 43 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 21 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பில்லாத 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,700 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 39 வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

சேலத்தில் இன்று 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் மொத்த பாதிப்பு 1,412 ஆக அதிகரித்துள்ளது. 872 பேர் குணமடைந்த நிலையில், 886 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரத்தில் இன்று 105 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,338 அதிகரித்துள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரியில் 14 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் 231 அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 335 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,009 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 164 பேருக்கு  கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனா  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,392 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 271 பேர் இருக்கு  கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 5,476 ஆக அதிகரித்துள்ளது. 3,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,704 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 239 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,181 ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று 100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,325 அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 132 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,967 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,495 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.