corona rate in tamilnadu

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில்1,374பேருக்குகரோனாபாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஒரே நாளில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைஆயிரதிற்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 27,256 பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் 12 ஆயிரத்து 132 பேர் தற்போது கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் ஒரேநாளில் 1,072 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இரண்டாம் நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குகரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்றும்சென்னையில் மட்டும் கரோனாவால் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் இதுவரை 18,693 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் சென்னையில் கரோனாவால் இதுவரை167 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 12 பேர் உயிர் இழந்ததால் தற்பொழுது கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாவது முறையாக இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. தற்போதுவரை தமிழகத்தில் 14,901 பேர்குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 585 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

Advertisment