Advertisment

பெரம்பலூரில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கரோனா - பள்ளிக்கு விடுமுறை!

்ிு

Advertisment

தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற வகுப்புகளுக்கு வரும் நவம்பர் முதல்தேதியிலிருந்துபள்ளி துவங்கும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி திறக்கப்பட்டதும் மாணவர்கள் சிலருக்குஅவ்வப்போதுகரோனாதொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 80க்கும் அதிகமான மாணவர்களுக்குகரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள்படிப்படியாகக்குணமாகி வருகிறார்கள்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளதனியார்ப்பள்ளி ஒன்றில் மாணவிகள் 7 பேருக்குகரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி வளாகம் மூடப்பட்டு வரும் 3ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகளுடன்தொடர்பிலிருந்தஅனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குகரோனாபரிசோதனைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

student schools
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe