கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கரோனாதடுப்பு நடவடிக்கை பணிகளுக்காகபிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் 3 கோடி நிவாரண தொகையைஅறிவித்துள்ளார். இந்த 3 கோடியில், 50 லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரணநிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும்,சினிமா தொழிலாளர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாயும், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தின ஊதியம் பெறும் பணியாளர்களுக்குஒரு கோடி ரூபாயும் நிதியாகவழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.