Skip to main content

ஆபாசப்பட வழக்கில் சிக்கிய கைதியைத் தொடர்ந்து காவலருக்கும் கரோனா! உயர் அதிகாரிகள் கலக்கம்!!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

Corona


சேலத்தில், பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய வழக்கில் சிக்கிய முக்கியக் கைதிக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அவருக்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், வழக்கு விசாரணையில் ஈடுபட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
 


சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். அவருடைய மனைவி ரூபா. வீட்டிலேயே அழகுநிலையம் நடத்தி வருகிறார். அழகுநிலையத்திற்கு வரும் ஆதரவற்ற பெண்களைப் பண ஆசை காட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். ஒருகட்டத்தில், வாடிக்கையாளர்களுடன் நிர்வாண நிலையில் இருக்கும் பெண்களை ரகசியமாகக் காணொலிப்பதிவு செய்து வைத்துக்கொண்ட லோகநாதன், சில பெண்களை மிரட்டியே தனக்குத் தெரிந்த வி.ஐ.பி. வாடிக்கையாளர்களுக்கு இரையாக்கி உள்ளார். அவரும் பலமுறை அவர்களைப் பலவந்தப்படுத்தி வல்லுறவு செய்துள்ளார். இதற்கெல்லாம் அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

லோகநாதன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பிரதீப், சிவா ஆகியோர் நான்கு பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டி வந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்த சேலம் நகர அனைத்து மகளிர் காவல்துறையினர், கடந்த சில நாள்களுக்கு முன்பு மூவரையும் கைது செய்தனர். மனைவி ரூபா, தலைமறைவாகி விட்டார்.
 

 


கைதான மூவரில் லோகநாதனுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் அவரை கைது செய்ததிலும், விசாரணை நடத்தியதிலும் நெருக்கமாகச் செயல்பட்ட உதவி ஆணையர் ஈஸ்வரன், நகர காவல் ஆய்வாளர் குமார், மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் அன்னதானப்பட்டி காவல்நிலைய காவலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கும் நோய்த்தொற்று இருக்குமோ என்று பதற்றம் அடைந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் கடந்த இரு நாள்களாக கரோனா நோய்த்தொற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அன்னதானப்பட்டி காவல் நிலைய காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்தான், முக்கியக் கைதியான லோகநாதனுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். 
 

http://onelink.to/nknapp


இதையடுத்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் அந்தக் காவலருடன் பணியாற்றி வந்த மற்ற காவலர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். இதையடுத்து நோய்த்தொற்று கண்டறியப்பட்ட காவலர், உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது ஒருபுறம் இருக்க, கைதான லோகநாதன், ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்கும் வெளியே செல்லாமல் கடந்த இரு மாதங்களாக வீட்டிலேயே இருந்திருக்கிறார். அப்படி இருந்தும் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால், சேலத்தில் சமூகப்பரவல் கட்டத்தை எட்டி விட்டதோ என்ற அய்யமும் சுகாதாரத்துறை தரப்பில் எழுந்துள்ளது.

எனினும், சமூகப் பரவல் தொடர்பாக சுகாதாரத்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.