Skip to main content

சென்னையை தவிர பிறமாவட்டங்களில் கரோனாவின் நிலை!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட பாதிப்பு!! 

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
 Corona in other areas other than Chennai

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த முழு பொதுமுடக்கம் மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மதுரையில் இன்று மட்டும் 280 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மதுரையில் மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,703 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் மதுரையில் கரோனாவால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 106 பேர் இதுவரை கரோனாவால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். 3,313 பேர் குணமடைந்து இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4500 ஐ நெருங்கி வருகிறது. மேலும் திருவள்ளூரில் இதுவரை 82 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 125 பேருக்கு கரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,268 அதிகரித்துள்ளது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

கோவை மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட பரிசோதனையில் இன்று 74 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 719 ஆக அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் இன்று 49 பேருக்கு  கரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. தற்போது வரை தேனி மாவட்டத்தில் 992  பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 753 பேர் சிகிச்சையில் உள்ளனர். 234 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கரோனாவிற்கு தேனியில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் முதல் முறையாக 100க்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் அங்கு 106 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 807 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், சென்னையில் தொடர்ந்து கரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் இன்று 2,400க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு உச்சத்தை தொட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.