Advertisment

21 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு - தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!  

Corona one day increase in 21 districts - Today's corona situation in Tamil Nadu!

தமிழகத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,949 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 68 நாட்களுக்குப் பிறகுநான்கு நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்றுகரோனா பாதிப்பு குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,56,635 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

Advertisment

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,197 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 26பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,117 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 2,011 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,13,087 பேர் பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இன்றுதமிழகத்தில் ஈரோடு உட்பட 21 மாவட்டங்களில் கரோனாஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளது. 16 மாவட்டங்களில் கரோனா இறப்பு இன்று பதிவாகவில்லை. இணைநோய்கள் ஏதும் இல்லாத 6பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

Advertisment

tamilnadu lockdown corona virus Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe