ADVERTISEMENT

ஊரடங்கை தளர்த்த மத்திய அரசு எடுத்த முடிவு! வற்புறுத்தவேண்டாம் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை!!!

12:41 AM Apr 19, 2020 | Anonymous (not verified)

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT



ஊரடங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் ஊரடங்கை தளா்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்து ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக திருச்சியில் துப்பாக்கி ஆலை, எச்.ஏ.பி.பி. ஆலை ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இயங்க உள்ள நிலையில், பணிக்கு வர வற்புறுத்தவேண்டாம் என்று பாதுகாப்புத்துறை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT