Corona infection for Tamil Nadu governor !!

நாடு முழுவதும் கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களானதூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள்ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநரின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ளும் அவரை மருத்துவர்கள் குழு கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment