ADVERTISEMENT
ADVERTISEMENT
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்களப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அரசியல் பிரபலங்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Show comments