Advertisment

தமிழ்நாட்டில் இன்று 841 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

j

தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று புதிதாக 841 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 126 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 200க்கும் குறைவான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 27,09,489 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 937 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,58,632 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இன்று கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,934 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,00,875 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 5,10,59,485 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,372 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisment

medicine
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe