ADVERTISEMENT

மேலும் ஒரு அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா தொற்று உறுதி!

10:00 AM Jan 04, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 8 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்தக்கட்ட பாய்ச்சல் எடுத்து வருகிறது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சேலம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT