தமிழகத்தில் 30 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த கரோனா!! 

Corona increased again after 30 days in Tamil Nadu !!

தமிழகத்தில் இன்று மேலும் 6,352பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் 30 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் 6 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6,326 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,15,590 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 52,726 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,285ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,33,173 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 78,793கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 6,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,55,727 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 87 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 2,712 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர்த்துபிற மாவட்டங்களில் இன்று 5,067 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe