Skip to main content

திண்டுக்கல், பழனியில் கரோனா அதிகரிப்பு!-சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை!

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

Corona increase in Dindigul, Palani! -Health Department warns!

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திண்டுக்கல்லில் கரோனா தொற்று அதிகரிப்பதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தினமும் சராசரியாக 200 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும் கூட வார்டுகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால் பல கரோனா நோயாளிகள் நடைபாதைகளிலும் பெட்டுக்கு கீழ் பகுதிகளில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

 

பழனி மற்றும் திண்டுக்கல்லில் செயல்படும் இரண்டு சிறப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் தற்போது 1600 க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். அதில் 166 பேர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே கரோனா பாதித்த பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்டத்தில் மொத்தம் 46 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கிறது. அதில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 14 கட்டுப்பாட்டு பகுதிகளும், பழனியில் 8 கட்டுப்பாட்டு பகுதிகளும் உள்ளன.  திண்டுக்கல் மாநகராட்சியில் 250 பேரும், பழனியில் 350 பேரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். திண்டுக்கல், பழனி நகரங்கள் வெளியூர் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளாக இருப்பதால் நோய் தொற்று அதிகமாக இருக்கிறது. எனவே பொதுமக்கள் முககவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், சோப்பு அல்லது கிருமிநாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் ஆகியவற்றை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.