Skip to main content

ஈரோட்டில் கரோனா எண்ணிக்கை திடீர் உயர்வு! காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்கள்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

கொடூர கரோனா வைரஸிடமிருந்து ஈரோடு தன்னை பாதுகாத்துக் கொண்டு வருகிறது என்ற ஆறுதல் செய்தி வந்த ஒரே நாளில் திடீரென எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26ல் இருந்து 56 ஆக உயர்ந்துள்ளது. இது ஈரோடு மாவட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தொடக்கத்தில் இருந்த எண்ணிக்கை கூடாமல் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென 9ஆம் தேதி மாலை மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று ஈரோட்டில் உறுதியானது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். 

 

 corona impact in Erode



கரோனா வைரஸ் பாதிப்பு எப்படி கூடியது என்று ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் சவுண்டம்மாள் நம்மிடம் கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் 28 பேர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அவர்கள் வசிக்கும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த மக்களிடம் இந்த வைரஸ் தொற்று இதுவரை ஏற்படவில்லை.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த வைரஸ் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர் 83 பேரிடம் நாங்கள் ரத்தப் பரிசோதனை செய்தோம். அந்த 83 பேரில்தான் இப்போது 26 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே இங்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் குடும்பத்தினர்தான் அவர்கள். ஆகவே இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான அந்த குடும்ப நபர்கள் 26 பேரும் இன்று முதல் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் அனைவரும் தற்போதுவரை நலமாகதான் உள்ளார்கள். ஏற்கனவே கரோனா வைரஸ் உறுதியானவர்கள் குடும்பத்தினர்தான் இப்போது வந்துள்ள கூடுதல் எண்ணிக்கை என்பதாகும்" என கூறினார்.
 

nakkheeran app



கரோனா வைரஸ் தொற்று என்பது ஈரோட்டில் எந்த புதிய நபர்களுக்கும் ஏற்படவில்லை. தாய்லாந்திலிருந்து வந்த 7 பேர் மூலமும், டெல்லியில் நடைபெற்ற  மாநாட்டிற்காக ஈரோட்டிலிருந்து சென்ற 40க்கும் மேற்பட்டோர் என கரோனா வைரஸ் தொற்று இவர்களுக்குள்ளேயே சுற்றி வருகிறது. அந்த மாநாட்டை முடித்து ஈரோடு வந்த இரண்டே நாட்களில் அவர்கள் கண்டறியப்பட்டு, உடனே தனிமைப்படுத்தப்பட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அப்படிப்பட்ட அந்த நபர்கள், அவரவர் வீட்டில் இருந்தது இரண்டு நாட்கள்தான். அந்த இரண்டு நாட்களிலேயே அவர்களின் குடும்பத்தினரை கரோனா வைரஸ் பலமாக தொற்றி பிடித்துக்கொண்டது. ஏற்கனவே இக்குடும்பத்தினர் தனிமைபடுத்தித்தான் வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இப்போது தொற்றுக்குள்ளானவர்களின் தொடர்புகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. ஆக ஈரோட்டில் இதன் எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றாலும், சமூக பரவல் என்கிற மூன்றாம் நிலைக்கு இந்த நிமிடம் வரை ஈரோடு வரவில்லை. ஒரு குழுவினர் தொடர்பை தவிர, ஈரோடு தொடர்ந்து பாதுகாப்பாகத்தான் உள்ளது என நம்பிக்கையுடன் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.