Corona impact approaching 600 in Tamil Nadu!

Advertisment

தமிழகத்தில் பரவலாக குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாகசற்று அதிகரித்து பதிவாகி இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 600-ஐ நெருங்கி பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 589 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 596 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,694 இருந்து 3,073 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 153 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 295 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 289 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டில்-122 பேருக்கும், கோவை 31, திருவள்ளூர் 27, காஞ்சிபுரம், கன்னியாகுமரியில் தலா21 என கரோனா பதிவாகியுள்ளது.