Skip to main content

தமிழகத்தில் 82 ஆயிரம் பேருக்கு கரோனா! -இன்றும் மட்டும் 4 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு!

Published on 28/06/2020 | Edited on 29/06/2020

 

'Corona' hits 82 thousand people in Tamil Nadu - only 4 thousand close to today !!!

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் 30-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது.

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,992 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை  மொத்தமாக 82,275 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 35,656 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 1,443 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,537. சென்னையில் மட்டும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி இன்று 54 பேர் உயிரிழந்துள்ளனர்.  அரசு மருத்துவமனைகளில் 44 பேரும், தனியார் மருத்துவமனையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் இன்று கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,079 அதிகரித்துள்ளது.

 

'Corona' hits 82 thousand people in Tamil Nadu - only 4 thousand close to today !!!


இந்நிலையில் மதுரையில் இன்று ஒரே நாளில் 248 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 நாட்களில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. தற்பொழுது அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2000-ஐ கடந்துள்ளது. தற்போது வரை 1,435 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு என்பது 5,073 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் அதிகபட்சமாக 75 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 2,589 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பூந்தமல்லியில் 21 பேருக்கும், ஆவடியில் 18 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 3,520 அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 2,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் திருவள்ளூரில் செங்கல்பட்டிற்கு அடுத்தபடியாக கரோனாவிற்கு 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அதேபோல் வேலூரில் இன்று ஒரே நாளில் 126 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வேலூரில்11 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை 1,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 357 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

 

ராமநாதபுரத்தில் இன்று ஒரே நாளில் 63 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவமனையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு 468 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நான்கு பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இன்று 63 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டுள்ளதால் ராமநாதபுரத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 711 ஆக அதிகரித்துள்ளது.

 

அதேபோல் தேனியில் ஒரே நாளில் 58 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தேனியில் 2 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 418 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மொத்த பாதிப்பு 571 ஆக அதிகரித்துள்ளது.

 

அதேபோல் திருவாரூரில் மேலும் 16 பேருக்கு கரோனா பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்னிலம், பேரளம்,  திருத்துறைப்பூண்டி காவல் நிலைய காவலர்கள்  5 பேர்  உட்பட மேலும் 16 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.