Skip to main content

ஈரோட்டில் கரோனா இறப்பு... -மண்ணுக்குள் செல்லக்கூட போராட்டம்!!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
corona in erode

 

ஈரோட்டில் இன்று கரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இளம் வாலிபர் உயிரிழந்தார், அவருக்கு வயது 33. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் இறந்த இளைஞர் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மூலப்பாளையம் காந்தி நகர் என்ற பகுதியில் வசித்த அந்த இளைஞருக்கு திருமணமானமாகி விட்டது. இந்த நிலையில் சென்ற 5 ம் தேதி இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரியான பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி 9 ந் தேதி அதிகாலை உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த இந்த நபர் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷாப்பிங் மாலில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவியும், ஐந்து வயது குழந்தையும் இருக்கிறார்கள். 

 

corona in erode


இவரது உடலை அடக்கம் செய்ய வெண்டிபாளையம் என்ற பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரின் உறவினர்களோடு எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 9 ந் தேதி மதியம் எடுத்து வந்தனர். முழு கவச உடையுடன், கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்வதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, கல்லறை தோட்டத்திற்கு திரண்டு வந்தனர். வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு தன்னார்வலர்கள் மீது கல்வீசி தாக்குவதற்கும் முயன்றனர். உடலை அடக்கம் செய்ய முடியாமல் ஆம்புலன்ஸில் வந்தவர்கள் தவித்து வந்தனர். 

தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் அங்கு  ஈடுபட்டனர். இந்த தகவல் மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்கு சென்றதும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்புரத்தினம், மணிகண்டன், செல்வம் மற்றும் போலீசார் அங்கு வந்து மக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், மக்களோ தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அந்த இடைப்பட்ட நேரத்தில் கரோனாவால் உயிரிழந்தவரின் அந்த உடலை அவரின் உறவினர்கள், தன்னார்வலர்களால் அதிரடியாக அடக்கம் செய்தனர். இறுதியில் போலீசார் மக்களை  சமாதனப்படுத்தி, கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் உடல் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்துதான் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால், உங்கள் பகுதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி கொடுத்தனர். வேறு வழியின்றி பொதுமக்களும்  அங்கிருந்து கலைந்து சென்றார்கள். கரோனாவால் அநியாயமாக இறந்தவர்கள் செத்த பின்பு மண்ணுக்குள் செல்லக்கூட போராட வேண்டியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.