/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adsds_28.jpg)
தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 2,875 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,654 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் இதுவரை 67,468 பேருக்கு இதுவரை கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவுக்கு 28,836 பேர் மருத்துவமனையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 21 வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு என்பது 45,814 ஆக உள்ளது.அதேபோல் இன்று ஒரே நாளில் 2,424 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 37,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி தமிழகத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 25 பேரும், தனியார் மருத்துவமனையில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 25 ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் கரோனாவுக்கு 668 பேர் உயிரிழந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)