தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 310 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் மொத்தம் 5,947 பேருக்கு இதுவரைகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 6 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு500க்கு மேல் இருந்த நிலையில்,தற்போது இரண்டாவது நாளாக கரோனா உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 500 க்கும் குறைவாக உள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
தமிழகத்தில் தற்போது வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கையானது 66 ஆக இருந்த நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் கரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று359 பேர் கரோனாவிருந்து குணமடைந்திருக்கின்றனர்.இதனால் தமிழகத்தில் 2,599 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடலூரில் இன்று ஒரே நாளில் 214 பேர் கரோனாவிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.