Skip to main content

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது..! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

Corona confirmed to former minister Vijayabaskar

 

இந்தியா முழுவதும் கரோனாவின் 2வது அலையின் பரவல் அதிகமாகியுள்ளது. தமிழகத்திலும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் சில நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி வருகிறது.

 

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அதில் கூறியதாவது, கரோனா தொற்று உறுதியானதும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி அமைச்சர் சொத்துக்குவிப்பு வழக்கு; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Ex-minister Vijayabaskar asset transfer case adjourned to January 6

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் வேண்டும் என்று சில விசாரணை நாட்கள் சென்ற நிலையில், கடந்த 2 வாய்தாவிற்கு முன்பு சுமார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட சொத்து ஆவண நகல்கள் விஜயபாஸ்கர் தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று புதன்கிழமை விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் ஆஜரான நிலையில், அடுத்த வாய்தாவின் போது வழக்கு விசாரணை செய்யலாம் என்று கேட்கப்பட்டதால், அடுத்த வாய்தா ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story

செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் (படங்கள்)

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி அரசுப் பணிக்கு காத்திருக்கும் செவிலியர்கள் கொரோனா காலத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.