Skip to main content

“அனைத்தையும் செலவழித்துவிட்டால்... அப்புறம் ஓட்டுக்கு?” -விருதுநகரின் கரோனா கணக்கு!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020
corona City's Corona Account!


வழக்கம் போல அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி “பிரதமரும், முதல்வரும் வீட்டிலேயே தனித்திருக்கச் சொல்கிறார்கள். உலகத் தலைவர்களெல்லாம் விலகியிருக்கச் சொல்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா..’ என அரசியல் செய்கிறார்.” என்று கொளுத்திப்போட, விருதுநகர் மாவட்ட திமுக தரப்பில் “ஆற்றாமையால் அமைச்சர் இப்படி பேசுகிறார். ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.  தமிழகத்தில் இத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் அமைச்சர் புலம்புகிறார்.  ஒன்றிணைவோம் என்ற திட்டத்தின் பெயருக்காக இவ்வளவு பொங்குகிறாரே அமைச்சர்..  ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் பங்குகொண்ட அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய நிகழ்ச்சியில், சமூக இடைவெளி என்பதே இல்லாமல் நெருக்கியடித்தார்களே? அங்கு மட்டும் கரோனா மறந்துபோனதா?” என்று திருப்பி கேட்கிறார்கள்.

 

corona City's Corona Account!


எதிரெதிர் தரப்பில் இந்த ‘அரசியல்’ சகஜமென்றாலும், சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.வையே கலாய்க்கிறார்கள், விருதுநகர் உ.பி.க்கள். “விருதுநகர் (திமுக) எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனிடம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.  “இந்த மாவட்டத்துல இருக்கிற நம்ம கட்சி நாலு எம்.எல்.ஏ.க்கள்ல வசதியான ஆளு நீதாம்பா..” என்று அடிக்கடி சொல்வார். விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ.க்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும்போது, சீனிவாசன் எம்.எல்.ஏ.வோ சுண்டுவிரலைக்கூட நீட்டுவதில்லை.  கஷ்டப்படும் தொகுதி மக்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமே என்று கட்சி நிர்வாகிகள் சொன்னால், “அதெல்லாம் பணம் வாங்கிட்டுத்தானே ஓட்டு போட்டாங்க. இப்ப உதவி பண்ணுனாலும், அப்புறம் ஓட்டு போடறதுக்கும் பணம் கொடுத்துத்தானே ஆகணும். எதுக்கு தேவையில்லாம கையிருப்பை காலி பண்ணனும்?” என்று யதார்த்தமாகப் பேசி சமாளித்துவிடுகிறார் என்கிறார்கள்.

 

corona City's Corona Account!

 

விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசனை தொடர்புகொண்டோம். அவருடைய ரத்த சொந்தம் ஒருவர்தான் லைனில் வந்தார். “கே.கே.எஸ்.எஸ்.ஆர். யாரைப் பார்த்தாலும் நீதாம்பா பணக்காரன்னு சொல்லுவார். அவரு பேச்சை கணக்குல எடுத்தா எப்படி?  எலக்ஷனுக்கு செலவழிச்சதுல ரெண்டு கோடிக்கு மேல சீனிவாசனுக்கு கடனாயிருச்சு. உரக்கடை வச்சிருக்காரு. சின்னதா ஃபைனான்ஸ் பண்ணுறாரு. கரோனா நிவாரணம் வழங்குற அளவுக்கு அவருகிட்ட எங்கேயிருக்கு பணம்? ஒன்றிணைவோம் திட்டத்துல தளபதி  கை காட்டுறவங்களுக்கு அரிசிப்பை கொடுத்துக்கிட்டுத்தான் இருக்காரு. பணத்தை வாரியிறைக்கிறதுக்கு இவரு என்ன ஆளும்கட்சி அமைச்சரா? ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வா?” என்று ‘லாப-நஷ்ட’ கணக்கோடு கேட்டார்.  

சரிதான்! ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் ‘ரவுண்டு’ கட்டி அடிக்கிறது கரோனா!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்