இந்நிலையில் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கரோனா பாதிப்பு உள்ளது என்பது தொடர்பான பட்டியலை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னையில் 15 மண்டலங்களில் எந்தெந்த பகுதிகள் எத்தனை பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது என்ற விவரம் பின்வருமாறு,
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 45 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவிக நகர் 24, அண்ணாநகர் 17, கோடம்பாக்கத்தில் 19 பேருக்கு கரோனா உள்ளது. தண்டையார்பேட்டையில் 14 பேருக்கும், தேனாம்பேட்டையில் 12 பேருக்கும், பெருங்குடியில் 6 பேருக்கும் தொற்றுள்ளது. வளசரவாக்கம், திருவெற்றியூர், அடையாரில் தலா 4 பேருக்கும், மாதவரத்தில் மூன்று பேருக்கும் உள்ளது. ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா இரண்டு பேருக்கு கரோனா தொற்றுள்ளது. மணலி, அம்பத்தூரில் கரோனா பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.