Advertisment

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் உயரும் கரோனா... பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது!

்ே

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக வட தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகின்றது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் கரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 327 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 15,193 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment
coronavirus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe