தமிழகத்தில் 2,000-ஐ கடந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!

பரக

தமிழகத்தில் கடந்த சிலமாதங்களாகக்குறைந்திருந்தகரோனாபாதிப்பானது சில நாட்களாகஅதிகரித்துபதிவாகி வருகிறது.குறிப்பாகசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில்கரோனாகட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில்முகக்கவசம்அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,827 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2069 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்கரோனாவுக்குசிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,033 இருந்து 12,013 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 864 பேர்டிஸ்சார்ஜ்ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 903 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 771 பேருக்குகரோனாபதிவு செய்யப்பட்டிருந்தது.கரோனாபாதிப்பு அதிகரித்து வரும் இந்நிலையில் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

Medical meetings
இதையும் படியுங்கள்
Subscribe