ADVERTISEMENT

சென்னையில் புற்றுநோய் சிகிச்சைக்கு வந்தவருக்கு 'கரோனா'

04:22 PM Apr 26, 2020 | kalaimohan


இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் பெரிய அளவில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT


இந்நிலையில் புற்றுநோய் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறுவதற்காக வந்தவருக்குத் தற்பொழுது கரோனா உறுதியாகியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த அந்த நபர் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற வந்த இடத்தில் கரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் தங்கியிருந்த மத்திய கைலாஷ் ஸ்ரீராம் நகர் தடைசெய்த பகுதியாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT