அம்மன் வேடமிட்டு கரோனா விழிப்புணர்வு - சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேரணி, வீதி நாடகங்கள், கானா பாடல்கள், பொம்மலாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கண்காட்சி போன்றவற்றின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் சென்னையில் இருசக்கர வாகன பேரணி மூலமாக கரோனா விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

அதே போல சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக மயிலாப்பூர் பகுதியில் அம்மன் வேடமணிந்து கரோனா விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

awareness corona mylapore
இதையும் படியுங்கள்
Subscribe