ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா உறுதி! 

10:44 PM Apr 03, 2020 | kalaimohan

கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்ற பலரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதையடுத்து, அம்மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும், சிகிச்சைக்குட்படுத்தப்பட்டும் உள்ளனர். கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம், பண்ருட்டி, மந்தாரக்குப்பம், புவனகிரி என மாவட்டம் முழுவதிலிருந்தும் 40 பேர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT


இவர்கள் 40 பேரும் கடலூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். 17 பேரின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், இவர்களில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. "மீதம் உள்ள நபர்களின் ரத்த பரிசோதனை முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் தெரிய வரும்" என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT