ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று நடிகர், நடிகைகளும் தொடர்ந்து கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயராம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Show comments