Skip to main content

மதுரையில் ஒரே நாளில் 80 பேருக்கு கரோனா!!!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
 Corona for 80 people in a single day in Madurai

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மதுரையில் ஒரே நாளில் 80 பேருக்கு கரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மதுரையில் 58 பேர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று ஒரே நாளில் திருவண்ணாமலையில் 130 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்