Skip to main content

கரோனா நிவாரண நிதிக்காக, உண்டியல் சேமிப்பு தொகையை கொடுத்த பள்ளி மாணவன்!!! 

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிற மாணவன், கோவை கணபதியில் வசித்து வருகிறார். கடுமையான கரோனா பாதிப்புக்காக தன் நான்கு வருட உண்டியல் சேமிப்பு தொகை  2,351 ரூபாயை கரோனா நிதியாக கலெக்டர் ராசாமணியிடம் அளித்தார்.

  k


அது குறித்து தர்ஷனிடம் நாம் பேசியபோது,  ‘’கடந்த நான்கு வருஷமா எனது அம்மா, அப்பா வழங்கிய நாணயங்களை உண்டியல் மூலமாக புதிய சைக்கிள் வாங்குவதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருந்தேன். கரோனா பாதிப்பை அறிந்த நான், முதலமைச்சர் நிவாரண நிதிக்காக என்னுடைய சிறு உண்டியல் சேமிப்பு பணத்தை  மதிப்பிற்குரிய  மாவட்ட ஆட்சியர் வசம் வழங்கினேன்.   இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  கரோனா பாதிப்புக்காக நமக்காக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர்,  தூய்மை பணியாளர்கள் ஆகியோர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

nakkheeran app



கரோனா பாதிப்பிலும் நமக்காக பாடுபடும் அவர்களுக்கு நாம் அனைவரும் அவரவர் வீட்டிலேயே இருந்து, அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வதின் மூலமும், சமூக  இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமும் நாம் நன்றி செலுத்த வேண்டும். இதன் மூலம் நம்மால் கரோனாவை ஒழிக்க முடியும்’’என்றார்.

மேலும் தர்ஷன், “கடந்த 2019 ம்  ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, பொது மக்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி 1,050   வண்ண ஓவியங்கள் வரைந்து  பள்ளி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தி  விழிப்புணர்வு  ஏற்படுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர்  கு. ராசாமணியிடம்  பாராட்டு பெற்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.