ADVERTISEMENT
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக இருந்த நிலையில், இன்று 138 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கிறது.
ADVERTISEMENT
சென்னையில் மொத்தமாக 906 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் கோயம்பேடு சந்தையில் மட்டும் 38 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT