'Corona' for 30 inmates at puzhal prison

Advertisment

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில்874 பேருக்குகரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் 618 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாஉறுதி செய்யப்பட்டவர்கள்எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் புழல் சிறையில் 30கைதிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது.

சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகள்94 பேருக்குகரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 பேருக்குகரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ளதாகசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடலூரிலிருந்து பயிற்சிக்காக வந்த ஐந்து கைதிகளிடம் இருந்து கரோனா தொற்றுஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது.