Corona for 20 more students in Tanjore ...

சில நாட்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சையில்அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இன்று (25.03.2021) தஞ்சையில் மேலும் 20 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கரோனா உறுதியாகி உள்ளது. இதனால் தஞ்சையில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

தஞ்சையில் கரோனா தடுப்பு முறைகளில் அலட்சியமாக செயல்பட்டதாக சில தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.