தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து பத்தாவது நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில்1,649 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் பிற மாநிலங்கள்மற்றும் வெளிநாடுகளில்இருந்து தமிழகம் வந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 34,914 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
தமிழகத்தில் கரோனாவுக்கு 16,776 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 1,243 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஏழாம் நாளாகஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 24 ஆயிரத்து 545 பேருக்கு இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக 244 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 307 என அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 18,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் பத்தாவது நாளாககரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.