ADVERTISEMENT

16 பள்ளிகளில் கரோனா... தஞ்சையில் பரபரப்பு

07:54 AM Mar 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் சில நாட்களாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக தஞ்சையில் பள்ளிகளில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தஞ்சையில் நேற்றுவரை (26.03.2021) 14 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளில் கரோனா உறுதியானதால், மொத்தமாக இதுவரை 16 பள்ளிகளில் கரோனா பாதிப்பு உருவாகியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதிதாக இரண்டு பள்ளிகளில் 13 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கும்பகோணம் லிட்டில் ஃபிளவர் பள்ளியில் 6 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆடுதுறை ரைஸ்சிட்டி பள்ளியில் 7 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் இதுவரை கரோனா உறுதியான மாணவர்களின் எண்ணிக்கை 243 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட 217 மாணவர்களில் 120 மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT