Advertisment

16 பள்ளிகளில் கரோனா... தஞ்சையில் பரபரப்பு

 Corona in 16 schools ... excitement in Tanjore

தமிழகத்தில் சில நாட்களாகவேகரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக தஞ்சையில் பள்ளிகளில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தஞ்சையில் நேற்றுவரை (26.03.2021) 14 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில், இன்று தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளில்கரோனா உறுதியானதால், மொத்தமாக இதுவரை 16 பள்ளிகளில் கரோனா பாதிப்பு உருவாகியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதிதாக இரண்டு பள்ளிகளில் 13 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கரோனாகண்டறியப்பட்டுள்ளது. கும்பகோணம் லிட்டில் ஃபிளவர் பள்ளியில் 6 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆடுதுறை ரைஸ்சிட்டிபள்ளியில் 7 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் இதுவரை கரோனாஉறுதியான மாணவர்களின்எண்ணிக்கை 243 ஆக அதிகரித்துள்ளது. கரோனாபாதிக்கப்பட்ட 217 மாணவர்களில் 120 மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisment

schools Thanjai corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe