'Corona' for 14-day-old baby

தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று 231 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒருவர் இறந்ததால் கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் 29 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

Advertisment

இந்நிலையில் இன்று தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தைக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்அரியலூரில் 4 வயது குழந்தைக்கும், பெரம்பலூரில் 6 வயது சிறுவனுக்கு கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது.

அண்மையில் தென்கொரியாவில் பிறந்து 28 நாட்களே ஆன பெண் குழந்தைக்குகரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு எந்தவொருமருத்துவ சிகிச்சைகளும் இல்லாமல் மருத்துவர்களின் மேற்பார்வையில்தொடர்ந்து மூன்று வாரம்தாய்ப்பால் மட்டும் கொடுக்கப்பட்டு கரோனாவிலிருந்து குழந்தை குணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.