தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.
இந்நிலையில் மற்ற மாவட்டங்களிலும் கரோனாபாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களில் நேற்றுஒரே நாளில்ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனாபாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் புதியதாக109பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை அங்கு கரோனா உறுதிசெய்யப்பட்டோர்எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது.