Skip to main content

ஊரடங்கை சாதகமாக்கி வேட்டை நடத்தும் போலீசார்!!! நாகையில் பரபரப்பு!!!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

கரோனா வைரஸ் விவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு அபாரமானதாக இருந்துவரும் நிலையில், நாகை மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள் சிலர் வழக்கம்போல் வசூல் வேட்டையில் ஈடுபட்டு, ஆதாரத்தோடு பணியிடை நீக்கத்திற்கு ஆளாகியிருப்பது போலீசார் வட்டாரத்தில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.


நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவப்பிரகாசம். இவருடைய சொந்த ஊர் ஜெயங்கொண்டம். இவர் நாகையில் பணிக்கு வந்ததிலிருந்து லஞ்சம் தலைவிரித்தாட துவங்கிவிட்டது. வெளிப்பாளையம் காவல்நிலையம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு எதிரே இருந்தும், காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, கள்ளசாராயம், காரைக்காலிலிருந்து பாட்டில்கள்,  மற்றும் பல சட்டவிரோத செயல்களும் கனஜோராகவே நடந்துவந்தது. இதற்கு வாரமுறையில் லஞ்சம் வாங்கி வந்திருக்கிறார் ஆய்வாளர் சிவப்பிரகாசம்.


 

​  nagai

 

அதோடு வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் வரும் எந்த புகாராக இருந்தாலும் பணமில்லாமல் புகாரை தொட்டதே இல்லை என்றும், மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளை பிடித்து அதனை விற்றும் பணம் பார்த்துவிடுவார் என்கிறார்கள் அங்குள்ள  சிலர்.

மேலும் நாகப்பட்டினத்திற்கு பணிக்கு வந்த காலத்திலிருந்து அவர் மீது எவ்வளவு புகார்கள் மேலிடத்திற்கு சென்றாலும் தன் மீது யாரும் நடவடிக்கை எடுக்காத படி, உயர் அதிகாரியின் மனைவி ஒருவருக்கு வாரம் ஒரு லட்சம் கொடுத்து தன்னை பாதுகாத்துக் கொள்வாராம்.
 

 nakkheeran app



இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் வெளிப்பாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க, அதிரடியாக லஞ்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார். மளிகை கடைக்காரர்களோ, மிரட்டலோடு லஞ்சமாக பணம் பறித்ததையும் வீடியோ ஆதாரமாக்கி,  கடந்த 20 ம் தேதி நாகை எஸ்பிக்கு புகாராக கொடுத்தனர். நேர்மையானவரகாவும், துணிவானவராகவும் செயல்பட்டுவரும் நாகை எஸ்பி செல்வ நாகரெத்தினம், ஆதாரங்களை உறுதி செய்துகொண்டு அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், ஆய்வாளர் சிவபிரகாசமோ எஸ்.பி உத்தரவையும் மதிக்காமல், ஆயுதபடைக்கும் செல்லாமல் நாகை அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி என கூறி உள்நோயாளியாக அட்மிட் ஆகிவிட்டார். இதனை அறிந்து கோபத்தின் உச்சத்திற்கே சென்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மீது தொடர்ந்து  வந்த லஞ்ச புகார்களை வைத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய காவல் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

பின்னர் லஞ்சம் பெற்ற புகாருக்காகவும், உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு கட்டுப்படாத காரணத்தாலும் ஆய்வாளர் சிவபிரகாசத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன். லஞ்சப் புகாரில் பலமுறை தப்பித்த ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்த நாகை மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளரை வியாபாரிகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

கடந்த வாரம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் திருவென்காடு பகுதியில் உள்ள மளிகை கடைகளை மிரட்டி லஞ்சம் பெற்றதாக பெண் காவலர் ஆய்வாளர் ஸ்ரீபிரியா இதேபோன்று வீடியோ ஆதாரங்களோடு சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.