Advertisment

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை!

copper plant waste highcourt madurai bench

Advertisment

உப்பாற்று ஓடையில் தனியார் இடத்தில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், உப்பாற்று ஓடைப்பகுதியில் ரசாயன காப்பர் லாக் கழிவுகளை அகற்றப் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (28/06/2021) விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை விதித்ததோடு, "ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா? ஓடையில் காப்பர் கழிவுகளைக் கொட்டியவர்கள் யார்? 2018-ல் பிறப்பித்த உத்தரவை தற்போது வரை ஏன் செயல்படுத்தவில்லை?" எனக் கேட்டு, 12 வாரங்களில் பொதுப்பணித்துறைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

waste Sterlite plant madurai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe