
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலாப் பேருந்து ஒன்று கடந்த 30-9-2023மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்த போது பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்கு திரும்பிச் செல்வதற்காகப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக அரசு நிவாரணம் அறிவித்திருந்தது. மேலும் இந்த விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவின் கீழ் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தர். அதன்படி பேருந்து உரிமையாளர் சுப்பிரமணி (வயது 65), ஓட்டுநர்கள் முத்துக்குட்டி (வயது 65), கோபால் (வயது 32) மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் (வயது 64) ஆகியோர் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சட்டப்பிரிவு 279, 337, 304 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பேருந்து விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் எனத்தெரியவந்த நிலையில், பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் முத்துகுட்டியின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு (2033 வரை) ரத்து செய்து நீலகிரி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)