Skip to main content

இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை பார்த்தது இல்லை! குடும்ப தலைவிகள் கண்டனம்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

 

gas33



கடந்த செப்டம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 858.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது, முந்தைய ஆகஸ்ட் மாத விலையைக் காட்டிலும் 30.50 ரூபாய் அதிகம். இந்த நிலையில் நடப்பு அக்டோபர் மாதத்திற்கு இந்த சிலிண்டர் விலை மேலும் 58 ரூபாய் அதிகரித்து, 916.50 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த புதிய விலை அமலில் இருக்கும்.
 

அதேபோல், டீக்கடைகள், உணவக தயாரிப்புக்கூடங்கள் போன்ற இடங்களில் வணிக பயன்பாட்டுக்காக உள்ள 19.2 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நடப்பு அக்டோபர் மாதத்தில் 1570 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 87 ரூபாய் அதிகமாகும். வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுகிறது. காஸ் சிலிண்டர்கள் விலையேற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

amutha

                                                                   லியோனி அமுதா


திண்டுக்கல்லைச் சேர்ந்த லியோனி அமுதா, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 20 ரூபாய் தான் ஏற்றினார்கள். ஆனால் இந்த பிஜேபி ஆட்சி போல் மூன்று மாதம், ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஐம்பது, நூறு என ஏற்றவில்லை. இப்படி ஏற்றியே இந்த 4 1/2ஆண்டுகளில் காஸ் விலையை ஆயிரம் ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டார்கள். இதன் மூலம் நடுத்தர, ஏழை  மக்கள் இனிமேல் காஸ் சிலிண்டர் பயண்படுத்த முடியாத அளவிற்கு  இந்த பிஜேபி அரசு கொண்டு வந்து விட்டது.


முதலில் இலவசம், மானியம் என  சொல்லி மக்களை காஸ் வாங்க சொல்லி விட்டு, இப்ப மாணியமும், இலவசமும் இல்லை என கூறி ஒட்டு மொத்தமாக பணம் கட்டி காஸ் வாங்கி கொள்ளுங்கள் என கூறி மக்களை ஏமாற்றி விட்டதே தவிர, இந்த பிஜேபி ஆட்சி பொது மக்களுக்கு எந்த ஒரு சலுகையும் செய்யவில்லை. இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை பார்த்ததும் இல்லை. 
 

இப்ப ஆயிரம் ரூபாய்க்கு வந்த காஸ் இன்னும் இந்த ஆட்சி முடிய ஆறு மாதத்திற்க்குள்ளேயே இன்னும்  நூறு, இருநூறு என ஏற்றி மக்களிடம் பணம் பறிப்பார்களே தவிர குறையபோவது இல்லை. ஏற்கனவே இந்த பிஜேபி ஆட்சியான மோடி அரசு  பொது மக்களுக்கு சலுகை செய்வதாக கருப்புபணத்தை மீட்டு தலா 15 லட்சம் போடுவததாக கூறி வங்கி கணக்குகளை ஆரம்பிக்க சொன்னார்கள். கடைசியில் மக்களின் வங்கி கணக்குகளில் ஒரு ரூபாய் கூட போடாமல் மோடி ஏமாற்றி விட்டார். இப்படி பொய் சொல்லியே ஆட்சி நடத்தும் பிஜேபிக்கு மக்களும் கூடிய விரைவில் சரியான பாடம் புகுட்டுவார்கள் என்று கூறினார்.
 


 

geetha

                                                                                      கீதாஇளவரசன்



''பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது சிலிண்டர் விலை சுமார் 350, 400க்கு தான் இருந்தது. மோடி அரசு வந்த பிறகு 2016ல் மார்ச்சில் 511 ரூபாய் வீட்டு உபயோக சிலிண்டர். இதிலே நேரடியாக வங்கிக்கே மானிய தொகை அனுப்புவதாக உறுதியளித்தார். எல்லாம் ஏமாற்று வேலையாப் போச்சிங்க. படிப்படியாக உயர்ந்து இப்போது சிலிண்டர் விலை 916 ரூபாய் 50 காசு. இது மட்டுமா சிலிண்டர் சப்ளை செய்பவர்கள் கூடுதலாக 70 ரூபாய் 80 ரூபாய் என வசூலிக்கிறார்கள். இதனால் இப்போது 1000 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்குகிறோம். இதற்க்கான மானியம் 421 ரூபாய் 79 காசு மத்திய அரசு வங்கியில் என் கணக்குக்கு செலுத்த வேண்டும். ஆனால் இப்போது எல்லாம் முறையாக மானியம் வங்கி கணக்குக்கு வருவதே இல்லை. எப்போதாவது தான் வரும் சிலமாதங்கள் வரவே வராது. நாங்கள் யாரிடம் போய் கேட்பது. இப்படி சிலிண்டரின் ஒட்டு மொத்த விலை எங்கள் கழுத்தை நெரிக்கிறது. மாதம் 200 ரூபாய்க்கு விறகு வாங்கி சமையல் செய்யலாம் போல் தோன்றுகிறது. மாதம் 800 ரூபாய் மிச்சப்படுத்த முடியும். மத்திய அரசு மீண்டும் விறகு அடுப்பெறிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. ஒரு அரசாங்கம் சொன்ன திட்டத்தை முறையாக செய்யாமல் ஏமாற்றுகிறது. அவசர தேவைக்கும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சீக்கிரம் சமைத்து கொடுக்க உதவியாக உள்ளதால் தான் இதை கட்டிக் கொண்டு அழ வேண்டியுள்ளது'' என்கிறார் கடலூர் மாவட்டம் பட்டூரைச் சேர்ந்த குடும்ப தலைவி கீதாஇளவரசன்.


 

mariyammal

                                                                                         மாரியம்மாள்


ஈரோட்டைச் சேர்நத மாரியம்மாள், "நானூறு ரூபாய்க்கு வாங்குன சிலின்டரை இன்னிக்கு தொள்ளாயிரம் ஆயிரம்னு மூனு மடங்கு ஏத்திப்புட்டாங்க. மானியத்தை எங்க பேங்க் அக்கவுன்ட்டுல போட்டுடுவோம்னு சொல்லி ஏமாத்துறாங்க. உழைச்ச காசுல அரிசி, பருப்பு, சிலின்டர் வாங்கி சோறு தின்கறவனுக்கு தான் இந்த கஷ்டமெல்லாம் தெரியும். மக்கள் பணத்தை கோடி கோடியா கொள்ளையடிச்சு எல்லா விலையையும் ஏத்தி ஏழைகளை நடுத்தெருவுல விடும் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் தெரியுமா? ஊரை அடிச்சு உலையில போட்ட பாவிக" என்றார் ஆவேசமாக.

ஜீவா தங்கவேல், எஸ்.பி.சேகர், சக்தி, இளையராஜா

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிலிண்டர் விலை உயர்வு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Increase in cylinder price

வர்த்தக சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் சிலிண்டரின் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடும். காரணம் தேர்தல் நேரங்களில் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால் குறைப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கு அரசியல் கட்சிகள் காத்திருக்கும் சூழலில் சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை 23 ரூபாய் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எண்ணூரில் கடையடைப்பு போராட்டம்!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Lockdown struggle in Ennoor

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

அதே சமயம் இது தொடர்பான வழக்கு இன்று (06.02.2024) பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 42 வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எண்ணூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 33 மீனவ கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கடையடைப்பு போராட்டமானது இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.