Skip to main content

கும்பகோணத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் நடத்த இருந்த மாநாட்டிற்கு தடை!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடத்த திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரும் ஜூன் 30-ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகளை நடத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் திட்டத்திற்கான அனுமதி மறுத்திருப்பதாக காவல்துறை பதில் மனு அனுப்பியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.

Convention on periyarist protest to against hydrocarbon project in Kumbakonam


தமிழகத்தின் கனிம வளங்களை சூறையாடும் நோக்கத்தோடு காவிரி டெல்டாவில் நுழையவிருக்கும் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி மக்களும், அரசியல்கட்சிகளும்  பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். அதைபோலவே நாசகாரத் திட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் ஜூன் 30-ஆம் தேதி கும்பகோணத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டு ஒருங்கிணைப்பாளர் குடந்தை அரசன், அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்திருந்தார். 

 

Convention on periyarist protest to against hydrocarbon project in Kumbakonam


இந்நிலையில் கும்பகோணம் மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் மணிவேல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான மாநாட்டை கும்பகோணத்தில் நடத்தினால் சட்டம் ஒழுங்க்குக்கு பிரச்சனை ஏற்படும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு பிரச்சினையாகிவிடும், மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலரும் மத்திய மாநில அரசுகளை தாக்கிப் பேசுவார்கள், அது வன்முறையாகிவிடும் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி அனுமதியை மறுக்கப்படுகிறது என கடிதம் மூலம் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் குடந்தை அரசனிடம் கேட்டோம், " காவிரி டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மாநாட்டை நாங்கள் நடத்த திட்டமிட்டோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்கிறது காவல்துறை, நாங்கள் நீதிமன்றம் மூலம் சட்டப்படி அனுமதி பெற்று மாநாட்டை நடத்துவோம், நிச்சயமாக மாநாடு குறிப்பிட்ட தேதியில் நடக்கும்," என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .