Skip to main content

சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக்கொலை- மனைவி தீக்குளிக்க முயற்சி!

Published on 26/05/2019 | Edited on 26/05/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமரவேல் மற்றும் பெருமாள். இவர்களின் இருவரது வீடும் ஒரே தெருவில் அடுத்தடுத்து உள்ளது. இந்த இரு வீட்டாருக்கும் இடையே வீட்டின் அருகே சுத்தம் செய்வதில் நீண்ட காலமாக சண்டை இருந்துவந்துள்ளது.

 

controversies in the cleaning process- Try to fire.. police investigation


 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெருமாள் குடும்பத்துக்கும், குமரவேல் குடும்பத்துக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இந்த சண்டை கைகலப்பாக ஒருக்கட்டத்தில் மாறியுள்ளது. இந்த மோதலில் பெருமாள் குடும்பத்தினர் குமரவேல் குடும்பத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்த குமரவேல் ஆந்திர மாநிலம் குப்பம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது தொடர்பாக அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர் குமரவேல் குடும்பத்தினர். போலிஸார் பணம் வாங்கிக்கொண்டு பெருமாள் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டுள்ளனர்.

 

controversies in the cleaning process- Try to fire.. police investigation



இந்நிலையில் மே 26ந்தேதி இரவு குமரவேல் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்துள்ளனர். இறந்து போன குமரவேல் உடலை திம்பேரி கூட்டு சாலையில் வைத்து இறந்துபோன உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரவேல் இறப்புக்குக் காரணமாக இருந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் வலியுறுத்தினர்.

 

 

controversies in the cleaning process- Try to fire.. police investigation



போராட்டம் நடைபெற்றுக்கொண்டியிருக்கும்போது இறந்துப்போன குமரவேல் மனைவி மற்றும் மகள் இருவரும் தங்கள் மீது மண்ணெண்ணய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்வோம் என்றனர். அதற்குள் அங்கு வந்த போலிஸார், அவர்களிடம் பேசி சமாதானம் செய்து, விசாரித்து உடனே கைது செய்கிறோம் என வாக்குறுதி தந்ததன் அடிப்படையில் 2 மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. உடலை எடுத்துக்கொண்டு உறவினர்கள் வீட்டு சென்று பின்னர் இடுக்காட்டில் அடக்கம் செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.