Skip to main content

சர்ச்சையாகியுள்ள எம்.எல்.ஏவின் 'காலணி'... என்ன நடந்தது ?

Published on 05/07/2020 | Edited on 06/07/2020

 

The controversial MLA's shoes ... what happened?

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டத்தில் உள்ள அரங்கல்துருகம் பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள துருகம் காப்புக்காடுகள் வரும் கானாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஜீன் 30ந்தேதி இரவு பெய்த கனமழையால் அந்தத் தடுப்பணை உடைந்துவிட்டது. அதுப்பற்றி அந்தக் கிராம மக்கள் தங்களது ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ, பேரணாம்பட்டு தெற்கு ஒ.செ என்கிற முறையில் தி.மு.க.-வை சேர்ந்த வில்வநாதனுக்குத் தகவல் கூறினர். அதனைத் தொடர்ந்து ஜூலை 1 ந் தேதி காலையே எம்.எல்.ஏ. வில்வநாதன் அந்தக் கிராமத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்றார்.

கானாற்றில் இறங்கி தடுப்பணை உடைந்ததை பார்வையிட்டவர், அங்கு வந்திருந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி கழக செயலாளர் சங்கர் என்பவரிடம், தன் செருப்பை எடுத்து வரச்சொன்னாராம். அவரும் எடுத்துவந்துள்ளார், இந்த வீடியோ, போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பட்டியலின சாதியைச் சேர்ந்தவரை, உயர் சாதி, எம்.எல்.ஏ என்கிற திமிரோடு செருப்பு எடுத்துவரவைத்தார் எனத் தகவல் பரவி பரபரப்பாகியுள்ளது.

திமுகவின் மா.செ, எம்.பி, எம்.எல்.ஏக்கள் எங்கு சென்றாலும் அந்தத் தொகுதி, தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் பணியைச் செய்கின்றனர். ஆம்பூர் தொகுதியில் அந்த அணியினருடன் எம்.எல்.ஏவுக்கு முரண்பாடு ஆகியுள்ளது. இதனால் அவர்கள் வருவதில்லை. அந்த வேலையை தி.மு.க.-வின் பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள அனிதாவின் கணவரும், வெங்கடசமுத்திரம் ஊராட்சி கழக செயலாளருமான சங்கர் தான் செய்துவருகிறார். அவர் தான் எம்.எல்.ஏவின் செருப்பைக் கையில் எடுத்து சென்றவர். எம்.எல்.ஏ எடுத்து வரச்சொன்னாரா அல்லது இவரே எடுத்துச் சென்றாரா என்பது தெரியவில்லை என்றார்கள்.

 

The controversial MLA's shoes ... what happened?


இதுபற்றி ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "பொய்யான தகவலை பரப்பராங்க. நான் யாரையும் செருப்பு எடுத்துக்கிட்டு வரச்சொல்லவில்லை" என்றார்.

செருப்பைச் சுமந்த சங்கர் நம்மிடம், "15 வருடமா அவருடன் இருக்கேன். என் மனைவி கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளரா இருக்காங்க. நான் எப்போதும் எம்.எல்.ஏவுடன் இருப்பேன். இருவரும் வேறு வேறு சாதியாக இருந்தாலும் அவர் சாதி பார்த்ததில்லை. அவர் உடைந்த தடுப்பணையை பார்வையிட காரில் இருந்து இறங்கி முன்னாடி போய்ட்டார். 25 மீட்டர் தள்ளி நான் பின்னாடி போனான். போகும்போது, ஒரு இடத்தில் எம்.எல்.ஏ.-வோட செருப்பு இருந்தது. எதுக்காக இவர் செருப்ப கழட்டி விட்டுட்டுப் போனார். சுகர் பேஷன்டான இவர் கால்ல கல்லு பட்டு காயம்மான பிரச்சனையாச்சேன்னு நான் தான் செருப்ப எடுத்துக்கிட்டு போனான். அதைப் பார்த்தவர் செருப்ப எதுக்கு தூக்கிட்டு வர்றன்னு சொல்லி என்னை சத்தம் போட்டார். இதான் நடந்தது. இது தெரியாம எனக்கு வேண்டாதவங்க யாரோ வீடியோ எடுத்து போட்டிருக்காங்க என்றார்.

இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.