Skip to main content

கட்டுப்பாடு எங்களுக்கு மட்டும் தானா..? கடனைக் கட்ட கூலி வேலைக்குப் போறேன்... அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த எஸ்.ஐ.!!!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020


 

"காவல்துறை என்றாலே கட்டுப்பாடானது என்பார்கள். அந்த கட்டுப்பாடு என்பது எங்களுக்கு மட்டும் தானா.? உயரதிகாரிகளுக்கு கிடையாதா..?" என கேள்விக்கேட்டதோடு மட்டுமல்லாமல், அந்த கட்டுப்பாடான காவல்துறையில் விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்" என தனது முகநூலில் பதிவிட்டு துறையின் மாண்பையே கேள்விக்குறியாக்கியுள்ளார் எஸ்.ஐ. ஒருவர்.

 

 தமிழக காவல்துறை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐந்தாவது காவல்துறை என்றாலும், "ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரானது தமிழக போலீஸ்" எனும் ஒற்றை சொல்லே போதும். தமிழக காவல்துறையினரின் திறமையை புகழ் பாட..!. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை, பொதுமக்கள் பாதுகாப்பு, பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை , கடலோர காவல் துறை,  குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை, பொருளாதார சிறப்புப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கிய தமிழக காவல்துறையில் ஏறக்குறைய 1,21,215 நபர்கள் பணியாற்றுகின்றனர். இத்தகைய பெருமைமிக்க காவல்துறையினை விட்டு, காரணம் கூறாமலேயே மன அழுத்தத்தால் பலர் வெளியேறிய நிலையில்,


 

 

 

தலையிலும் முகத்திலும் இருக்கும் முடியை கூட நம் இஷ்டப்படி  வைத்து கொள்ளமுடியாத பணி.

சொந்த பந்தங்களின் வீட்டு நல்லது கெட்டதில் கலந்து கொள்ள இயலாத பணி.

பண்டிகைகளையோ நம் குடும்ப விழாக்களையோ நமது மனைவி மக்களோடு அனுபவிக்க முடியாத பணி.

காலவரையற்ற பணி.

வாராந்திர ஓய்வில்லா பணி.

அரசு விடுமுறைகள் எதையும் அனுபவிக்க முடியாத பணி.

இம்மாதம் யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது என உயர் அதிகாரிகளால் மாதம் தோறும் அறிக்கை அனுப்பபடும் ஒரே பணி.

அனுமதிக்கப்பட்ட 12 நாள் விடுமுறையைகூட நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி.

அமைச்சு பணியாளர்களின் வேலையையும் நம்மீது சுமத்தி நாம் செய்ய தவறினாலோ மறுத்தாலோ நமக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளை வழங்கும் பணி.

மொத்தத்தில் இவற்றையெல்லாம் வெளியே சொல்லகூட முடியாத படி கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரே பணி.

இதுபோன்ற மன அழுத்தத்தின் காரணமாக செய்யும் தவறுகளினால் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து வெறுப்பை சம்பாதிக்கும் பணி.

இவற்றையெல்லாம் கேட்பதற்கு சங்கங்கள் அமைப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட ஒரே பணி.

நாடு சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டுகள் ஆகியும் சுதந்திரம் கிடைக்காத ஒரே பணி.

சீருடை பணியாளர் எனும் காவல் பணி.

இத்தனைக்கும் முன்வைக்கும் ஒரே சொல் "கட்டுப்பாடான துறை"

ஏன் உயர் அதிகாரிகளுக்கு அந்த கட்டுப்பாடு பொருந்தாதா?

 

இப்படிக்கு:

விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்...

இதுவரை ஆதரவு வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி.

அதிகாரம் செலுத்த நினைத்தவர்களுக்கு   வாழ்த்துகள்.. என தந்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தான் காவல்துறையின் பணியினை விட்டு வெளியேற காரணம் கூறியிருக்கின்றார் தூத்துக்குடி மாவட்ட தருவைக்குளம் காவல் நிலைய எஸ்.ஐ.யான ராஜா குமார்.

 

  முகநூல் பக்கத்தில் கருத்திட்ட 2011ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ ராஜாகுமார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா மாங்குடி எனும் கிராமத்தினை சேர்ந்தவர். மொத்தம் 1050 போலீஸ் எஸ்.ஐ.க்களை உள்ளடக்கிய 2011 பேட்ஜில் தற்பொழுது 750 போலீஸ் எஸ்.ஐ-க்கள் சட்டம் ஒழுங்கு பிரிவிலும், மீதமுள்ள 300 நபர்கள் பட்டாலியன், ஆயுதப்படை மற்றும் சிறப்பு யூனிட்களிலும் பணியாற்றி வருகின்றனர். முதற்கட்ட எஸ்.ஐ.பயிற்சியை கிருஷ்ணகிரியில் எடுத்த தருவைக்குளம் எஸ்.ஐ.ராஜாகுமார், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை என பல்வேறு மாவட்டங்களிலும், ஆயுதப்படையிலும் பணிபுரிந்திருக்கின்றார். நேர்மையாளரான இவர் சென்னை அமைந்தகரையில் இந்தியன் வங்கி மேலாளருடன் மோதியது வீடியோவாக வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது தனிக்கதை.

 

  இது இப்படியிருக்க கடந்த வாரத்தில் தனது காவல் நிலையத்திற்குட்பட்ட தனிப்பிரிவு காவலரை அழைத்து, " எனக்கு சம்பளம் வரவில்லை.! சம்பளம் வந்தால் தான் கடனை அடைத்துப் பணியாற்ற முடியும்.. கடன் நெருக்கடியில் சிக்கிக்கொண்ட எனக்கு சம்பளம் தந்தால் இங்கு வேலைப் பார்க்கின்றேன். இல்லையெனில் கூலி வேலைப் பார்த்து சம்பளத்தை அடைத்துவிட்டு மீண்டும் போலீசில் பணியாற்ற வருகின்றேன்." என்று கூறிவிட்டு முறையாக அறிவிப்பு செய்யாமல் வெளியேறியிருக்கின்றார் எஸ்.ஐ.ராஜாகுமார்.


 

 

 

 தூத்துக்குடி மாவட்ட காவல்துறையோ, " தற்பொழுது தான் தருவைக்குளத்தில் பணியில் சேர்ந்திருக்கின்றார். எஸ்.பி.அலுவலகத்திலுள்ள செக்சன் அலுவலக கண்காணிப்பாளரிடம் இவர் கொடுத்த ஜாயினிங்க் ஆர்டரில் இறுதியாக பணியாற்றிய இடத்தை குறிப்பிடவில்லை. அது ஏன் குறிப்பிடவில்லை..? எனக்கேட்டு மெமோ கொடுத்ததற்கு தான் இந்த பதிவுகளே.. அரசுப்பணியிலுள்ள ஒருவர் எதனையும் மறைக்கக் கூடாது அவருக்கு தெரியாதா என்ன..?" என எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர் அவர்கள்.

 

 " என் மீது குற்றம் சுமத்தி, முக நூலிலிருந்து பதிவை நீக்க சொல்கிறார்களே தவிர என்னுடைய குறையை காதுக்கொடுத்து கேட்கவில்லை... அத்தனைக்கும் ஆதாரம் இருக்கு..! இப்பவும் வேலை தேடி அலைஞ்சுக்கிட்டுத்தான் இருக்கின்றேன். வேலை கிடைத்தால் கடனை அடைச்சுட்டு நிம்மதியாய் இருப்பேன்." என்கிறார் எஸ்.ஐ.ராஜாகுமார்.

 

செவிமடுக்குமா காவல்துறை..?

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; இறால் பண்ணையை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி இருக்கின்றனர். இது போல உப்பளம் நடத்த அனுமதி பெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.

இது சம்பந்தமாக 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புதன் கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

இந்த நிலையில் வியாழக்கிழமை(14.3.2024) ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்சராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லின் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர். பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

அப்பகுதி பொது மக்கள் கூறும் போது.. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணைக்குட்டை பற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இப்போது அந்தக் கொட்டகை அடையாளமாக இருக்கக்கூடாது என்பதற்காக இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். இது போன்ற இடங்களுக்கு ஆலங்குடியில் இருந்து ஒரு பெண் காவல் அதிகாரி அடிக்கடி வந்து செல்வார். அவருக்கு தெரியாமலா இது நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கடந்த சில மாதம் முன்பு கோட்டைப்பட்டினம் அருகே ஒரு பேக்கரி உணவு தயாரிப்பு கூடத்தில் கஞ்சா கைப்பற்றினார்கள் அந்த கூடத்தை உடைத்தார்களா என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் தற்போது கஞ்சா கைப்பற்றிய இறால் பண்ணை குட்டையில் வேறு எங்கும் போதைப் பொருள் புதைத்து வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தான் உடைத்து தரைமட்டமாக்கி பார்த்திருக்கிறார்கள் என்கின்றனர்.

போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்ட விரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரை மட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பெண் ஊழியரின் அநாகரிக அர்ச்சனை! -நடுக்கத்தில் விருதுநகர் நகராட்சி!

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

VIRUDHUNAGAR

 

விருதுநகர் நகராட்சி அலுவலக கிளார்க் பவானியின் வாயிலிருந்து உதிர்வதெல்லாம் ஆபாச வார்த்தைகள்தான். இன்றைய தினம் (21-ஆம் தேதி), தனது பாணியில் நகராட்சி அலுவலகத்தில் பவானி வசைமழை பொழிந்தபோது,  யாரோ ஒருவர் கைபேசியால் வீடியோ எடுத்துள்ளார்.  அந்த வீடியோ பதிவில் “பெரிய ரோஷக்காரியா.. பெரிய இதுபண்ணிட்டு செருப்பைக் கழற்றி அடிக்கிறான்... நல்லா (வீடியோ) எடு.. எந்த ஆர்.டி.ஓ., எந்த கலெக்டர்கிட்டயும் காட்டு..” என்பது மட்டுமே  பிரசுரிக்கக்கூடிய வார்த்தைகளாக உள்ளன.

 

யார் இந்த பவானி? ஏன் இவ்வளவு கோபம்?  

 

இதே பவானி,  ஏற்கனவே அருப்புக்கோட்டை நகராட்சியில் பணிபுரிந்தபோது, எதற்கெடுத்தாலும் வாய்க்குவந்தபடி எல்லோரையும் திட்டியிருக்கிறார். காவல்நிலையத்தில் புகார்கூட கொடுக்கப்பட்டதாம். அங்கிருந்துதான் விருதுநகர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இங்கும் எந்த நேரமும் திட்டிக்கொண்டேயிருக்க, சஸ்பென்ட் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார். இன்று பிழைப்பூதியம் பெறவந்தபோது, சகட்டுமேனிக்கு வசைபாட, அலுவலகத்திலிருந்தவர்கள் விறுவிறுவென்று வெளியேறியிருக்கின்றனர்.

 

கணவரை இழந்த பவானி கைபேசிகூட வைத்துக்கொள்வதில்லை. எந்த நேரமும் டென்ஷனிலேயே இருப்பதால், அவர் குறித்து விரிவாகப் பேச, விருதுநகர் நகராட்சி அலுவலகம் நடுங்குகிறது. செருப்பைக் கழற்றி அடித்ததாக  போகிறபோக்கில் பவானி சொல்லும் குற்றச்சாட்டுக்கு, விருதுநகர் நகராட்சி அலுவலகத்தால் விளக்கம் அளிக்க முடியவில்லை. பவானியைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், தனது கருத்தைப் பகிர அவர் முன்வந்தால்,  வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

 

பவானியின் உளவியல் சிக்கல் என்னவோ?